• Download mobile app
07 Jun 2025, SaturdayEdition - 3405
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

October 5, 2019

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1212 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது அமைந்துள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 12ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 958 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும்,254 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கபட்டது.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பல்கலை கழக மானிய ஆணையம் தென்கிழக்கு பிராந்திய அலுவலகத்தின் இணை செயலாளர் ஸ்ரீனிவாஸ் 1212 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பின் பேசிய அவர் மாணவ மாணவிகள் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் உலகளவில் சாதனை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும், சுய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்களை தொடங்கி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் இயக்குனர் வாசுகி,முதல்வர் லக்ஷ்மணசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க