• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

October 5, 2019

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1212 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது அமைந்துள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 12ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 958 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும்,254 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கபட்டது.. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பல்கலை கழக மானிய ஆணையம் தென்கிழக்கு பிராந்திய அலுவலகத்தின் இணை செயலாளர் ஸ்ரீனிவாஸ் 1212 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பின் பேசிய அவர் மாணவ மாணவிகள் பட்டம் பெற்றது மட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் உலகளவில் சாதனை மேற்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்றும், சுய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்களை தொடங்கி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி சாதனை படைக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் இயக்குனர் வாசுகி,முதல்வர் லக்ஷ்மணசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க