• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஒருவர் அடித்து கொலை – 12 பேர் கைது !

May 29, 2024 தண்டோரா குழு

கோவை காந்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா.இவர் அவிநாசி சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனைக்குள் புகுந்து நேற்று முன்தினம் இரும்பு கம்பிகளைத் திருட முயன்றதாக தெரிகிறது.

இதனிடையே மருத்துவமனை காவலாளிகள் ராஜாவை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.தாக்குதலில் ராஜா மயங்கி விழுந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த காவலாளிகள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து,மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.ஆனால் பலனின்றி மணி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே,மருத்துவமனையின் துணைத் தலைவர் நாராயணன்,செக்யூரிட்டி, ஊழியர்கள் உட்பட 12 பேரை கைது செய்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவமனையில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க