• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த இளைஞர் உயிரிழப்பு

June 25, 2018 தண்டோரா குழு

கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந் தபோது இளைஞர் ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.உயிரிழந்தவரின் விபரம் குறித்தும்,உடன் வந்தவர் குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கனமழை காரணமாக கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகள்,ஆறு,குளம் என நீர்நிலைகள்,அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து,கடந்த 9 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கோவை குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

மழை அளவு குறைந்ததையடுத்து,கடந்த 21ம் தேதி முதல் மீண்டும் கோவை குற்றாலத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில்,கோவை குற்றால அருவியில் குளித்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.உடனே,அவரை வெளியே கொண்டு வந்தபோது உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலிறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உயிரிழந்தவரின் விபரம்,அவருடன் வந்ததாக சொல்லப்படும் நபர்,சிசிடிவி காட்சிகள்,குற்றால அருவி நுழைவாயில் கட்டண பதிவு புத்தகம் ஆகியவை கொண்டு காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அருவியில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியான இருந்ததால் வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.மேலும்,அருவியில் போதுமான மருத்துவ சிகிச்சை இல்லையென்றும் குற்றச்சாட்டப்படுகிறது.

மேலும் படிக்க