• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குற்றாலம் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் கடந்த 9 நாட்களாக மழையின் காரணமாக மூடப்பட்டு இருந்த கோவை குற்றலாம் இன்று மழை குறைந்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கோவையில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்,கடந்த 9 நாட்களாக அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் நேற்று மழை குறைந்ததால் சராசரி அளவுக்கு தண்ணீர் வருவதன் காரணமாக அருவியில் இன்று அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர்.இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும்,கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் இதுவரை 110 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.அதிகபட்சமாக வால்பாறையில் உள்ள சின்கோனா பகுதியில் 30 மில்லி மீட்டர் மழையும்,குறைந்த பட்சமாக பொள்ளாச்சியில் 8 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.சிறுவாணி அணையில் இன்னும் ஐந்து அடி நிரம்பினால் அணையின் முழு கொள்ளளவை எட்டி விடும்.

மேலும் படிக்க