• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சி புகைப்பட கண்காட்சி

March 19, 2022 தண்டோரா குழு

சர்வதேச வனநாளை முன்னிட்டு கோவை குற்றாலத்தில் பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சி புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச வனநாள் கொண்டாடப்படுகிறது. சர்வதேச வனநாளை முன்னிட்டு வனம், பறவைகள்,விலங்குகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,கருத்தரங்குகள் நடைபெறும்.

அந்த வகையில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் சர்வதேச வனநாளை முன்னிட்டு, கோவை சிறுவாணி மலை தொடரில் உள்ள பறவை இனங்கள் மற்றும் வண்ணத்து பூச்சிகளின் புகைப்படங்களின், புகைப்பட கண்காட்சி நடத்தி உள்ளது.

கோவை குற்றாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்பட கண்காட்சியை பார்த்து வருகின்றனர். இதன் மூலம் சிறுவாணி மலை தொடரில் மட்டும் இருக்கும் அரிய வகை பறவைகள், வண்ணத்து பூச்சிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும் படிக்க