• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குற்றலாம் அருவிக்கு செல்லத் தடை

July 10, 2018 தண்டோரா குழு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால்,மறு அறிவிப்பு வரும் வரை குற்றாலம் அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக அவ்வப்பொழுது சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதன் காரணமாக,மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவிக்கு,சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.அணையின் மொத்த கொள்ளளவான 50 அடிக்கு,தற்போது 47.5 அடியாக உயர்ந்துள்ளது நிலையில்,அணை நிரம்பி வழிய இன்னமும் 2.5 அடி உயரமே உள்ளது.

மேலும் படிக்க