• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளை கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

October 30, 2019 தண்டோரா குழு

கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகளை கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சேவையில் கடந்த 68 ஆண்டுகளாக பல்வேறு தொழில் நுட்பங்களுடன் குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கோவை குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு சாதனையாக 40 படுக்கை வசதிகள் கொண்ட அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக
துவங்கப்பட்டது.

இதற்கான துவக்க விழாவில் புதிய சிகிச்சை பிரிவுகளை கே.என்.சி கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளையின் தலைவர் பதி திறந்து வைத்தார். இந்த புதிய தீவிர சிகிச்சை பிரிவில் ஒரே நேரத்தில் பல்வேறு அவசரகால கட்டத்தில் உள்ள 40 நோயாளிகளை சிகிச்சை அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் செயற்கை சுவாச முறை,ரத்த சுத்திகரிப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் எக்மோ போன் எனப்படும் உயர்தர சிகிச்சை என அனைத்து வகை சிகிச்சைகளும் நவீன உபகரணங்களோடு செவிலியர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவில் இடுப்பு,பின்முதுகு,தொடை உட்பட எலும்பு தொடர்பான மஜ்ஜை சிகிச்சைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் விதமாக இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த புதிய சிகிச்சை பிரிவுகள் குறித்து மருத்துவமனையில் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுசாமி பேசுகையில், எங்களது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் அதி நவீன சிகிச்சைகள் வழங்கும் விதமாக இந்த பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும்,அனைத்து நவீன மருத்துவ உபகரணங்களோடு இந்த அதி நவீன தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.இந்த துவக்க விழாவில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ,மருத்துவ ஊழியர்கள் ,செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க