• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

February 3, 2021 தண்டோரா குழு

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கோவை சுந்தராபுரம் காந்தி நகர் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் காந்திநகர் பகுதியில் உள்ள அண்ணாவின் சிலைக்கு கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.98 வது டிவிசன் பகுதியில் நடைபெற்ற இதில், குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் காதர்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி,

தி.மு.க.தலைவர் செல்லும் இடங்களில் பொதுமக்களின் அமோக வரவேற்பு இருப்பதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலில் ,மாபெரும் எழுச்சியோடு வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்தார்.இதில் 100 வது வார்டு வட்ட செயலாளர் மேட்டூர் மாணிக்கம்,குறிச்சி ஜெகதீஷ், பாலாஜி, நிர்மல் குமார், விவின், மேட்டூர் கார்த்தி,ப்ரவீண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க