• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

September 28, 2020 தண்டோரா குழு

வேளாண் தொடர்பான சட்டங்களை திரும்ப பெற கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும், அதற்கு துணைபோன அதிமுகஅரசைக் கண்டித்தும் இன்று மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சிகள், ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று கடந்த 21-ம் தேதி சென்னையில் நடந்த திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று,தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் படி கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பாக மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சேனாதிபதி தலைமை வகித்தார். இதில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்,மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

மதுக்கரை மத்திய ஒன்றிய செயலாளர் இ.பி.ஆர்.என்ற ராஜேந்திரன்,மதுக்கரை மேற்கு ஒன்றிய செயலாளர் ராணி சித்ரா ஆகியோர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இதில் தி.மு.க காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க