September 28, 2019
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்த 1800 மாணவியர்கள் பட்டம் பெற்றனர்.
கோவை அவினாசி சாலையில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக யு.ஜி.சியின் கூடுதல் செயலர் டாக்டர் தேவ் ஸ்வரூப் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
இன்று கல்லூரி படிப்பை முடித்து வாழ்க்கையை துவங்கும் மாணவிகள் இனி வரும் பல்வேறு கட்டங்களில் எதிர் கொள்ளும் சவால்களில் வெற்றி பெற்று முன்னேற வேண்டும். நாடு முழுவதும் தற்போது 900 யுனிவர்சிட்டிகளும் 42,000 கல்லூரிகளும் திறம்பட செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 41 மாணவிகள் உட்பட 1800 இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.