• Download mobile app
05 Aug 2026, WednesdayEdition - 3829
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் தூக்குபோட்டு இளைஞர் தற்கொலை

May 28, 2018 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வடமாநில தொழிலாளி ராஜேந்திரசிங் என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் புதிய மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பால கட்டுமான பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டுவந்தனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் 6.30 மணிக்கு பாலம் கட்டுமான பணிக்கு வேலைக்கு வந்த வடமாநில தொழிலாளியான ராஜேந்திர சிங் என்பவர் பாலத்தின் மேல் பகுதியில் பணிக்கு சென்று, அங்கிருந்த கம்பியில் துணி மூலம் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வந்த போது ராஜேந்திர சிங் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதன் பின் உடனடியாக காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ராஜேந்திர சிங் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் ராஜேந்திர சிங் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க