• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை காந்திபுரம், உக்கடம், டவுன் ஹால் போன்ற பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

December 4, 2021 தண்டோரா குழு

கோவையில் காந்திபுரம் டவுன்ஹால் பெரிய கடை வீதி ரயில் நிலையம் லட்சுமி மில் சின்னியம்பாளையம் பீளமேடு இடையர்பாளையம் வடபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.

பல்வேறு முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து சென்று வருகிறது. அலுவலகம் சென்று வீட்டுக்கு திரும்பியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர்கள் பல்வேறு பகுதிகளில் நின்று போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்திற்கு அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது.அதேபோல ரயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் கடைகளையும் தண்ணீர் தேங்கி உள்ளதால் அந்த பகுதிகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது கிராஸ்கட் சாலையில் 700 கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க