• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கல்லூரியில்மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது– கமல்ஹாசன்

October 16, 2018 தண்டோரா குழு

கோவை அரசு கல்லூரியில்மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கதுஎன மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நான் கட்சிகளை நோக்கி செல்லவில்லை, மக்களை நோக்கி செல்கிறேன். எனக்கென அரசியல் தலைவர்கள் மத்தியில் மதிப்புள்ளது. என்னை மதிக்க தவறுவது என்பது அவர்களின் பெருந்தன்மை இன்மையே காட்டுகிறது. போராட்டம் என்பது கனமான வார்த்தை, சட்ட ரீதியாக போராடுவோம்.கூட்டணி குறித்து நான் இப்போது முடிவு செய்ய முடியாது. மத்திய அரசு என்பது ஒன்று இருந்தே தீரும். ஊழல் செய்த கட்சியினருடன் எங்களுக்கு கூட்டணி இல்லை. ஊழல் யார் செய்தார்கள் என்பது முக்கியம். தாத்தா செய்த ஊழலுக்கு பேரனை காரணம் சொல்ல முடியாது.நான் யாரையும் நம்பி இல்லை. மக்கள் என்னோடு இருக்கின்றனர். உறுப்பினர் சேர்க்கை நன்றாக நடக்கிறது. கோவை கல்லூரியில் பகவத்சிங் தொடர்பாக மாணவர்கள் கொண்டாட்டம் என்பது என்னை பொறுத்தவரை தவறானது அல்ல. மாணவியை சஸ்பெண்ட் செய்தது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

அப்போது கமல்ஹாசனின் கட்சி கருவிலேயே கலைக்கப்பட வேண்டிய சப்பாணி குழந்தை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு தீய சக்தி. அவரின் கருக்கலைப்பு கருத்தை பெண்கள் பார்த்து வருகிறார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க