• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை கமிஷனர் அலுவலகத்தில் திருப்பூரைச் சேர்ந்த இளம் காதல்ஜோடி தஞ்சம்

December 6, 2018 தண்டோரா குழு

காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெண்ணின் பெற்றோர் கௌரவ கொலை செய்து விடுவேன் என பெண்ணை மிரட்டுவதாக கூறி இளம் காதல் தம்பதியர் கோவை மாநகர காவல் துறையில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பொல்லிகாளிபாளையம் பகுதியை சேர்ந்த அழகர்சாமியின் மகன் வசந்தகுமார் திருப்பூரிலுள்ள பிரபல செல்போன் கடையில் பணியாற்றி வருகிறார்.இவர் திருப்பூர் புதுரோடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான பிச்சைமணி என்பவரது மகளான ரம்யாவை தனது பள்ளி பருவத்திலிருந்தே காதலித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் வீட்டில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதாக கூறி சென்ற இருவரும் கோவைக்கு வந்து ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கௌரவ கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று கூறி இளம் காதல் தம்பதியர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்து ஆணையர் உத்தரவின் பேரில் காந்திபுரம் பகுதியிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.
மேலும் மணமகன் வசந்தகுமாருக்கு 21 வயதே ஆகியுள்ளதால் திருமணத்தை பதிவு செய்ய இயலாமல் இருப்பதாகவும் இதனை பயன்படுத்தி பெண் வீட்டார் இருவரையும் பிரிக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறிய அப்பெண் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க