• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஒலம்பஸ் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

November 10, 2021 தண்டோரா குழு

கோவை திருச்சி சாலை ஒலம்பஸ் பகுதியில் வாலாங்குளம் உபரி நீர் ஆறாக ஓடும் பகுதிகளை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் பார்வையிட்டார்.

கோவையில் பெய்துவரும் கனமழையால் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாலாங்குளம் உபரி நீர் மற்றும் கழிவுநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.கழிவுநீர் வழிபாதைகளை பராமரிக்காததால் சாலையில் துற்நாற்றத்துடன் ஓடும் கழிவு நீரால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

சாலையில் ஓடும் கழிவு நீரால் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் நோய்தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக அச்சபடுகிறார்கள்.இந்த தகவலை அறிந்த கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாலாங்குளம் பகுதியில் உள்ள பாதாள சாக்கடைகளை, ரோடுகளில் ஓடும் உப நீர்களை நேரில் பார்த்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து உடனடியாக இதை சீர் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் படிக்க