May 28, 2019
தண்டோரா குழு
கோவை ஈஷா யோகா தியான மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு கிறிஸ்தவ பாதிரியார் மத பிரச்சாரம்.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசிங். இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். இந்த நிலையில் இவர் கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு மக்கள் கூட்டம் உள்ள நேரத்தில் ஏசு தான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார் இந்த சிலையும் இந்த பாம்பும் உங்களை ஒருபோதும் காப்பாற்றாது இதை திறந்து வைத்த பிரதமர் மோடிக்கும் சேர்த்துச் சொல்கிறேன் இயேசு தான் உங்கள் அனைவரையும் காப்பாற்றுவார் என மத பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.