• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் பகுதியில் போதை மாத்திரை விற்ற இளைஞர் கைது

December 16, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் பகுதியில் போதை மாத்திரை விற்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா போதை ஊசி போதை மாத்திரைகள் உள்ளிட்டவை புழக்கத்தில் விடும் நபர்களை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கைது செய்து வருகின்றனர்.

இருந்தபோதும் போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை பெரியகடை வீதி போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ஆசீர்வாதம் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உக்கடம் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை நடத்தினர்.

அவரிடம் 45 நைட்ராசிபம் போதை மாத்திரைகள், டைடால 20 மாத்திரைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த மாத்திரைகளை வலி நிவாரணியாக மருத்துவர்கள் நோயாளிகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தி சில வாலிபர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.

இந்த மாத்திரையை மறைத்து வைத்து இளைஞர்களுக்கு விற்பதற்காக வைத்திருந்த நபரை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் பிடிபட்ட நபர் கோவை கோட்டைமேடு ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரின் மகன் பரூக் என்பது தெரியவந்தது.தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க