• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடம் காந்திபுரம் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் மழையால் வந்ந பணிமூட்டம்

December 5, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் காந்திபுரம் அவிநாசி ரோடு போன்ற பகுதிகளில் மழையால் வந்ந பணிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் பல இடங்களில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது இதனால் மாநகர பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது விடியவிடிய தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு சவாலாக இருந்தது.

பல்வேறு வாகனங்களை பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். இருப்பினும் மழைநீர் கோவையின் பல பகுதிகளில் வடியாமல் இருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,

சாக்கடையில் மண் மற்றும் கழிவுப் பொருட்கள் அதிகம் கலந்து வெளியேறியதால் நீர் செல்லுகின்ற பாதை அனைத்தும் தடைப்படும் உள்ளது. இதுவே கோவை மாநகரத்தில் அனைத்து சாலைகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட காரணமாக இருந்தது துரிதமாக வேலைகள் செய்து கொண்டிருக்கின்றோம்.இன்று மதியத்துக்குள் தேங்கிய தண்ணீர் வெளியேற்றப்படும் என தெரிவித்தனர்.

இதனிடையே இந்த காலை முதல் சுமார் 7 மணி வரை மாநகரப் பகுதி முழுவதும் பனி மூட்டத்தால் முடங்கியது மழைநீர் தேக்கம் ஒரு பக்கம் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் என பொது மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாலும் இது ஒரு இது நோய் குறித்த அச்சம் கொள்ள வைத்தது மேலும் இந்த பழமானது அடுத்த வரக்கூடிய பருவமழையை குறைக்கின்ற வகையில் இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க