December 19, 2018
தண்டோரா குழு
கோவை ஈச்சனாரியில் பள்ளி வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்தனர்.
கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் ஈச்சனாரியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.இதனால் பொள்ளாச்சி செல்லும் பேருந்துகள் மதுக்கரை வழியாக மாற்றுப்பதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று காலை ஈச்சனாரியில் தனியார் பள்ளி வாகனத்தின் மீது மேட்டுபாளையத்தில் இருந்து பொள்ளாச்சி சென்ற தனியார் பேருந்து மோதியதில் அருகிலிருந்த இருசக்கரவாகனங்கள் மீது இரு பேருந்துகளும் மோதின இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். மற்றோரு இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் சிறிய காயங்களுடன் தப்பித்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,பாலம் கட்ட ஆரம்பித்ததிலிருந்து இருந்தே அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாகவும் இது போன்ற விபத்துகளுக்கு காரணம் வாகன ஓட்டிகள் முறையாக சாலை விதிகளை கடைபிடிக்கமால் இருப்பதேயாகும் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.