• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஆணைகட்டியில் யானை தாக்கி வீடு சேதம்

April 27, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் செம்புக்கரைபழங்குடியின கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை, மீண்டும் வீடு ஒன்றை சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவையை மாவட்டம் ஆனைகட்டியை அடுத்த செம்புக்கரை பழங்குடியின கிராமத்திற்குள் நேற்று முன்தினம் புகுந்த காட்டு யானை, சி. வெள்ளிங்கிரி என்பவரின் வீட்டில் உணவு ஏதேனும் கிடைக்குமா..? என சோதனையிட்டது. அப்போது, சுற்றுச்சுவர் மற்றும் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

ஆனைகட்டி அருகே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காட்டு யானையினால், வீடு சேதமடைவது இது 2-வது முறையாகும்.
வனங்களில் ஏற்படும் காட்டுத் தீயினால், வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறி, மனித குடியிருப்புகளுக்கு அருகாமையில் சுற்றித் திரிகின்றன. எனவே, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க