• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு

September 28, 2020 தண்டோரா குழு

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரொனா எதிரொலி காரணமாக , மக்கள் குறைகளை அவர்களது பகுதியிலுள்ள மணியகாரர் அலுவலகங்களில் புகாராக கொடுக்கலாம் என ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு காரமடையச்சேர்ந்த சித்ரா(20) என்ற பெண் பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார். அப்போது காவலர்கள் சோதனை செய்வதை பார்த்ததும்,பெட்ரோலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது. பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், அவரை தடுத்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

தாய், தந்தை, அண்ணன் இறந்த நிலையில் சித்ரா தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது காரமடையை சேர்ந்த கெளரி சங்கருக்கும் மற்றொரு பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில்,அப்பெண் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து கெளரி சங்கருக்கும்,சித்ராவுக்கும் மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 50,000 ரூபாய் வரதட்சணை கேட்டு சித்ராவை கெளரி சங்கர் அடித்து கையை உடைத்துள்ளார்.பணம் இருந்தால் என்னோடு வாழ வா, என துன்புறுத்தியதால் ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க