• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

December 1, 2021 தண்டோரா குழு

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் எச்.ஐ.வி., என்ற கொடுந்தொற்று கண்டறியப்பட்டு, 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள், உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேரணியை தொடங்கி வைத்தார். 300க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துக்கொண்ட பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வ.உ.சி மைதானம் வரை நடைபெற்றது.

முன்னதாக ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். முன்னதாக கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

மேலும் படிக்க