• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் தீவிரம் 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டம்

January 4, 2022 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ. நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடந்து வருகிறது.

கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவிநாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.
சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கி.மீ. நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.

இனிவரும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகன பெருக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பாலம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்த உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 10.10. கிமீ நீளத்திற்கு அமையவுள்ளது. 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமையவுள்ளது. நான்கு இடங்களில் ஏறுதளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது.இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இரு புறமும் சேவைச் சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது. இப்பாலம் அமையவுள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமைய உள்ளது.

மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது. தற்போது இந்த மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.

மேலும் படிக்க