கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் சாலை விபத்தில் சிக்கியவரை அமைச்சர் அவர்கள் மீட்டு உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
கோவை சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் அமைச்சர் எஸ் பி வேலுமணி இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கோவை சுல்தான் பேட்டை அருகே உள்ள செஞ்சேரி பிரிவு பகுதியில் வரும் பொழுது சாலை விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சிக்கினார் அப்போது அங்கு வந்த அமைச்சர் எஸ் பி வேலுமணி உடனடியாக அவரது பின்னால் வந்த வாகனத்தில் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் அமைச்சர் அவர்கள் சாலை விபத்தில் யார் சிக்கினாலும் அதை பார்த்தவுடன் வாகனத்தை நிறுத்தி அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் மருத்துவமனையில் நிர்வாகிகளை அழைத்துப் பேசி உடனடியாக முதலுதவி செய்யுங்கள் என மருத்துவர்களிடம் பேசினார் மேலும் சாலை விபத்தில் சிக்கிய நபரை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் மேலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது