• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே வாலிபர் குத்தி கொலை – சகோதரியின் கள்ளக்காதலன் கைது

March 22, 2023 தண்டோரா குழு

கோவை அடுத்துள்ள வேடப்பட்டி நம்பியழகம்பாளையத்தை சேர்ந்தவர்
ஜெகன்ராஜ்(33).பெயிண்டர். இவரது அக்காவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மதன்ராஜ்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தொடர்பாக ஜெகன்ராஜுக்கும், மதன்ராஜுக்கும் இடையே அடிக்கடி தகராறு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், நேற்று முன் தினம் இரவு ஜெகன்ராஜ், மதன்ராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அங்கு வந்த மதன்ராஜை, ஜெகன்ராஜ் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மதன்ராஜ் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து ஜெகன்ராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதன்ராஜ் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி அந்தப் பகுதியில் உள்ள மின் மயானம் அருகே இறக்கி விட்டார். பின்னர் மதன்ராஜ் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெகன்ராஜை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. இது தொடர்பாக வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மதன்ராஜ் தேடி வந்தனர். அவரை நேற்று தேனி அருகில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க