• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் கொரானா சிறப்பு வார்டில் கல்லூரி மாணவி அட்மிட்

March 19, 2020

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கோவை மாவட்டத்தில் கொரானா அறிகுறி தென்படும் நபர்களுக்கு திருச்சி ரோட்டில் உள்ள கோவை அரசு மருத்துவமனை மற்றும் சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியிலுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக சிறப்பு கொரானா வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று கோவை சூலூர் அடுத்து காங்கயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி கோவை அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர் பெங்களூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 15ஆம் தேதி ரயில் மூலம் கோவை வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது.

இதையடுத்து சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் அவருக்கு கொரானா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கொரானா வார்டில் மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மாணவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் படிக்க