• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவகல்லூரி பேராசிரியர் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு

May 30, 2018 தண்டோரா குழு

கோவையில் வருமானத்திற்கு அதிகமாக 90 லட்சம் வரையில் சொத்து சேர்த்ததாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை பேராசிரியர் இளங்கோ,மற்றும் அவரது மனைவி பொறியாளர் மல்லிகா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் இளங்கோ.இவரது மனைவி மல்லிகா தேசிய நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் இளங்கோ கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தபடி,குனியமுத்தூர் பகுதியில் மல்லிகா நர்சிங் ஹோம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்றும் நடத்தி வருகின்றார்.அரசு ஊழியர்களான இளங்கோ மற்றும் அவரது மனைவி மல்லிகா ஆகிய இருவரும் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து 2013 ம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக 90,51,269 ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது லஞ்ச ஒழிப்பு துறைக்கு தெரியவந்தது.இதில் வருவாயை விட அதிகமாக இருந்த 90 லட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை வாங்கியதற்கான வரவு குறித்த எந்த ஆவணங்களும் இவர்களிடத்தில் இல்லை.

இதனையடுத்து பேராசிரியர் இளங்கோ,அவரது மனைவி மல்லிகா ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க