March 6, 2019 தண்டோரா குழு
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட 15 பேராசிரியர்கள் இடமாறுதல் செய்யப்பட்டதை திரும்பபெற வலியுறுத்தி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சத்துணவு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு பணியிடை நீக்கம் மற்றும் பணிமாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இதில் தமிழகம் முழுவதும் கைது செய்யபட்ட 25 பேராசிரியர்களில் பணியிடை நீக்கம் செய்யபட்டு அரசு திரும்பபெற்றது.
இந்நிலையில் 15 பேராசியர்களை மட்டும் அரசு,பழி வாங்கும் நோக்கில் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனை கண்டித்தும், பேராசிரியர்களின் இடமாறுதலை தமிழக அரசு திரும்ப பெறக்கோரி, தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற இருப்பதாக தெரிவித்தனர்.