• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டம்

February 2, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பாக விதி முறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என வலியுறித்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக மாநகர் புறநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதற்காக அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகை முன்பாக பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விதிமுறை மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி அதிமுக அலுவலகம் முன்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றார்.

அதிமுக அலுவலகம் முன்பாக மாநகராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் அதுவரை இப்பகுதியில் இருந்து செல்ல மாட்டேன் என கூறி காத்திருப்பு போராட்டம் நடத்தும் டிராபிக் ராமசாமியுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிளக்ஸ் பேனரை அகற்றாமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என கூறி காவல் துறையினருடன் டிராபிக் ராமசாமி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். உடனடியாக விதி மீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற வில்லை எனில் கோவை காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருப்பதாகவும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக டிராபிக் ராமசாமியின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவை மாநகர பகுதியில் மட்டும் 40 இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

மேலும் படிக்க