• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அண்ணா காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்

September 24, 2020 தண்டோரா குழு

வியாபாரிகளிடம் முறைகேடாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வரும் கோவை அண்ணா காய்கறி மார்க்கெட் குத்தகைதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் மார்க்கெட் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை-மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அண்ணா காய்கறி சந்தையில் நானூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிறிய அளவிலான கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த நிலையில் அங்கு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டண முறை கழிப்படம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான குத்தகைதாரராக காளியப்பன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு மார்க்கெட் தற்காலிகமாக தடாகம் சாலையிலுள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த சூழலில் குத்தகைதாரரான காளியப்பன் அங்குள்ள வியாபாரிகளிடம் அதிகாரிகளின் பெயரை தவறாக பயன்படுத்தி அதிக அளவிலான தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மீண்டும் பஇய இடத்திற்கே சந்தையை மாற்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என கூறி ஒவ்வொரு கடை காரரிடமும் ஐந்தாயிரம் ரூபாய் வீதம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டி வியாபாரிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக அண்ணா மார்க்கெட் வளாகத்த உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் குத்தகைதாரரான காளியப்பனின் முறைகேடான நடவடிக்கைகள் காரணமாகவே வியாபாரிகள் பலர் கொரொனா நோய் பாதிப்புக்கு ஆளாகியதாகவும் மாநகராட்சி ஆணையர் பெயரில் உள்ள மின் இணைப்புக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை விட அதிக தொகையை வசூலித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.வியாபாரிகள் போராட்டத்தை தொடர்ந்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.எனினும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அனைத்து வியாபாரிகளையும் இணைத்து பெரியளவிலான போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க