• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த லாரி கிளீனர் சாவில் திடீர் திருப்பம் கெளரவ கொலையா ?

July 24, 2018 தண்டோரா குழு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்த போடாராட்டதில் ஈடுபட்டு வருக்கின்றனர்.

இந்நிலையில்,கோவையடுத்த மேட்டுபாளையத்தில் இருந்து நிஜாம் என்பருக்கு சொந்தமான லாரியில் காய்கறிகள் ஏற்றி கேரள மாநில சங்கனாசேரி கொண்டு செல்ல,திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் புறப்பட்டுள்ளனர்.இதில் லாரி ஓட்டுனர் நூருல்லா மற்றும் கிளீனர் விஜய் என்ற முபாரக் பட்சா சென்றுள்ளனர்.

அப்போது வாளையாறு சோதனை சாவடியை கடந்து வாளையாறு அடுத்த கஞ்சிக்கோடு அருகே மர்ம நபர்கள் சிலர் லாரியின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.கல் வீச்சில், நெஞ்சுப்பகுதியில் பலத்த காயம் அடைந்த முபாரக் பாட்ஷா,சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஓட்டுனர் நூருல்லா காயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போடாராட்டதில் ஈடுபட்டு வரும் நிலையில்,லாரி இயக்கப்பட்டதால் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில்,கேரள லாரி உரிமையாளர்கள் இந்த சம்பவதிற்கு தொடர்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.இந்நிலையில்,கிளீனர் இறப்புக்கு கல்வீச்சு காரணமல்ல,இது ஒரு கவுரவ கொலையாக இருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்துள்ளனர்.முபாரக் பாட்ஷாவின் இயற்பெயர் விஜய்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர் முஸ்லீமாக மதம் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க