• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 600ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு !

July 2, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி
இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் பணியாற்றி வரும் மூன்று ஆண்கள், பீளமேடு, ஸ்ரீ நகரை சேர்ந்த 21 வயது ஆண்,தெலுங்கு பாளையம் தனியார் அபார்ட்மென்ட்டில் வசிக்கும் 25, 35 வயது ஆண், இடிகரையை சேர்ந்த 50 வயது பெண், சிங்காநல்லுார் கோத்தகிரி கார்டனை சேர்ந்த 23 வயது ஆண், பி.என்.புதுாரை சேர்ந்த, 73 வயது மூதாட்டி, செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்த 21 வயது பெண், ஜோதிபுரத்தை சேர்ந்த 40 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது நபர் என மொத்தம் 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம்,கொரோனாவால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்சமயம், 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க