December 17, 2018
தண்டோரா குழு
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கோவையில் வைஷால் வீதி , பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
இது குறித்து கடை மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.