• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல் – வட மாநில இளைஞர் கைது

February 28, 2023 தண்டோரா குழு

போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும்ஒழிக்கும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி பகுதியில் (சரவணபவன் ஹோட்டல் அருகில்) கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக பெரியநாயக்கன்பாளையம்
மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கருமத்தம்பட்டி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணிநந்தர் மகாநந்தா (32) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.2,00,000 மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் படிக்க