• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4 மாணவர்களின் உலக சாதனையை அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர்

December 19, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூர் பகுதியில், உள்ள ஆர்கேவி பள்ளி வளாகத்தில், பிரேம் எம்எம்ஏ அகாடமி சார்பாக, 4 மாணவர்களின் உலக சாதனையை அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில், கடந்த 8 ஆண்டுகளக, பிரேம் எம்எம்ஏ அகாடமி சார்பாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிக்பாக்ஷிங் பயிற்சி அளிக்க பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மையத்தில் கிக்பாக்ஷிங் பயின்ற சுமார், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல்வேறு பரிசிகளை பெற்றுள்ளனர்.

அந்த வகையில், பிரேம் எம்எம்ஏ அகாடமியில் கிக்பாக்ஷிங் பயிற்சி பெறும் நாண்கு மாணவர்களான, 18 வயதான கெளதம், 15 வயதான ஆதி கிருஷ்ணா, 26 வயதான விக்னேஷ், 13 ஹரிஷ் ஆகியோர்,கோவை குனியமுத்தூர் பகுதியி்ல், உள்ள ஆர்கேவி பள்ளியில் காலை 6 மணிக்கு இரண்டு கைகளிலும் கிக்பாக்ஷிங் செய்து கொண்டே ஒரு மணி நேரத்தில், 10 கிலோ மீட்டர் தூரம் கடந்து சாதனை படைத்தனர்.

இந்த சாதனையை,உலக சாதனையை அங்கீகரித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர், நாண்கு மாணவவர்களுக்கும், அதற்கான சான்றிதல்களையும், பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினர், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி துணைமேயர் வெற்றி செல்வன், பரிசுகளை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ் ராஜ், இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சதாம் ஹுசைன், பிரேம் எம்எம்ஏ அகாடமியின் நிறுவனர் பிரேம், அன்ட்லி ப்ளாக் பெல்ட் ஆகாடமி நிறுவனர் ஆனந்தகுமார், ஆர்கேவி பள்ளியின் மேளாளர் தர்மகண்ணன், என பலரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

மேலும் படிக்க