• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது !

July 25, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது.இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவையில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 27 ஆம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் இந்த நேற்று வெளியிட்டிருந்தார். தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு நேரத்தில் அதற்கு முந்தைய தினம் சாலைகளில் பொதுமக்கள் பல்வேறு அத்தியாவாசிய பொருட்களை வாங்க சமூக விலகல் இல்லாமல் நெருக்கமாக கூடினர்.இதனை தவிர்க்க வேண்டி மாலை ஐந்து மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடைகள் அனைத்தும் மாலையிலேயே அடைக்கப்பட்டன.இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியே நடமாடுவோரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்மாலையிலேயே ஊரடங்கு துவங்கியதால் உழவர் சந்தை, மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக்கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் படிக்க