• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 36வது 16வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டி 14ம் தேதி துவங்குகிறது

May 11, 2019 தண்டோரா குழு

36வது 16வயதுக்குட்பட்டோருக்கான தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடத்தப்படவுள்ளது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து 700 வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

இந்தியகூடைப்பந்து சம்மேளனம் நடத்தும் 16வயதுக்குட்பட்டோருக்கான ( ஆண்கள், பெண்கள்) 36வது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை பீளமேடு பகுதியிலுள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டரங்கில் வருகின்ற 14ம் முதல் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டிகளில் நாடு முழுவதிலும் இருந்து 25 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் அணிகள் என 700 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், 60தேசிய நடுவர்கள் கலந்துகொள்கின்றனர். இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்திய கூடைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்படுவர். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியில் முதல் மூன்று இடங்களை ராஜஸ்தான், மகாராட்டிரா மற்றும் தமிழ்நாடு அணிகள் பெற்றது. 1962ம் ஆண்டில் கோவையில் தேசிய போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில், 57ஆண்டுகளுக்கு பிறகு தேசிய போட்டிகளை நடத்தும் வாய்ப்பை தேசிய கூடைப்பந்து சம்மேளனம் கோவைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இபோட்டிகளுக்கு சிறப்பு ஏற்பாடாக வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நடுவர்கள் தங்க இடம், உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. .

மேலும் படிக்க