• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 35 குட்டிகளுடன் பிடிபட்ட கண்ணாடிவிரியன் பாம்பு !

June 26, 2020 தண்டோரா குழு

கோவையில் வீடு ஒன்றின் குளியல் அறையில் பதுங்கியிருந்த கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பு சுமார் 35 குட்டிகள் வரை அந்தப் பாம்பு இன்று எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கோவில்மேடு திலகர் வீதி பகுதியில் வசித்து வரக்கூடியவர் மனோகரன்.இன்று காலை அவரது வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்ததைக் கண்ட அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாம்பு பிடிப்பவரான முரளி என்பவரிடம் தகவல் அளித்துள்ளார்.தகவலின் பேரில் அங்கு சென்ற முரளி குளியல் அறையின் ஒரு மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு ஏற்கனவே தான் கொண்டு சென்றிருந்த பையினுள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார்

பின்னர் அதனை வனப்பகுதிக்குள் விடுவதற்காக இருந்த போது பிடிபட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பாம்பு தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுக்க துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த முரளி அதே பகுதியில் ஒரு ஓரமாக அந்த பையை வைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து குட்டிகளை ஈன்றெடுத்த பாம்பு சுமார் 35 குட்டிகளை இன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பாம்பினை குட்டிகளுடன் இன்று மாலைக்குள் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாகவும் இந்தியாவிலேயே மிக கொடிய விஷமுடைய பாம்பு வகையான இந்த கண்ணாடி விரியன் பாம்பு குட்டி போடும் இனத்தை சார்ந்தது என்றும் பாம்பினை பிடித்த முரளி தெரிவித்தார்.

மேலும் படிக்க