July 24, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று 189 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவையில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் 189 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2966 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கோவையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று 180 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1659 ஆக உயர்ந்துள்ளது.தற்போது 1275 பேர் இ.எஸ் ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்