• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 நாட்களாக குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு மாடு பிடிபட்டது

September 19, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த குருடம்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஒன்று கோவை சரவணம்பட்டி கீரநத்தம் பகுதியில் புகுந்தது. சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதியில் உள்ள புதர் மறைவுகளில் காட்டுமாட்டை தேடும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில்,கோவை நகருக்குள் இரு தினங்களாக சுற்றிதிரிந்த காட்டு மாடு இன்று புறநகர் பகுதியான மயிலம்பட்டி பகுதியில் சுற்றியபோது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.அதை லாரியில் ஏற்றி ஆனைகட்டி வனப்பகுதிக்குள் விட கோவை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க