• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2 தனியார் மருத்துவனைக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ்

August 28, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களை கடைசி கட்டத்த்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இ எஸ் ஐ மருத்துவமனையை தவிர்த்து 10க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் உடல்நிலை மோசமடையும்போது அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாக கூறப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் நோயாளிகள் அரசு மருத்துவமனையில் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே உயிருக்கும் நிலை காணப்படுகிறது.இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிசை பலனின்றி உயிரிழப்பவர்களின் பட்டியலில் இணைக்கப்படுகின்றனர்.இதுபோல கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி கடைசி கட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பிய 2 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் கூறும்போது,

கோவை அரசு மருத்துவமனைக்கு இதுவரை 170 க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பரிந்துரைக்கப் படுள்ளதாகவும்,இதில் 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளின் நடவடிக்கையால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க