• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி

April 16, 2019 தண்டோரா குழு

கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி , கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் , TRSSA, FRSI, ASSA, RARS ஆகிய ஸ்கேட்டிங் அகடாமிகளை சார்ந்த பயிற்சியாளர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.

இப்பேரணி கோவை பந்தயச்சாலையில் நடைபெற்றது. இப்பேரணியை பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் “100% வாக்களிப்போம்” “வாக்குரிமை நமது உரிமை ” “வாக்களிப்பது நமது கடமை” வாக்களிப்போம் ஜனநாயகம் காத்திடுவோம் ” போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும், முழக்கங்களை இட்டவாரும் பந்தயச்சாலையை சுற்றி வந்தனர்.

இறுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்து வலியுறுத்தினர்.

மேலும் படிக்க