April 16, 2019
தண்டோரா குழு
கோவையில் 100% வாக்களிக்க வலியுறுத்தி கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி , கோவை சறுக்கு விளையாட்டு பெற்றோர்கள் சங்கம் , TRSSA, FRSI, ASSA, RARS ஆகிய ஸ்கேட்டிங் அகடாமிகளை சார்ந்த பயிற்சியாளர்கள், மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அவர்களது பெற்றோர்கள் என அனைவரும் இணைந்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர்.
இப்பேரணி கோவை பந்தயச்சாலையில் நடைபெற்றது. இப்பேரணியை பெற்றோர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து துவக்கி வைத்தனர். இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் “100% வாக்களிப்போம்” “வாக்குரிமை நமது உரிமை ” “வாக்களிப்பது நமது கடமை” வாக்களிப்போம் ஜனநாயகம் காத்திடுவோம் ” போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாரும், முழக்கங்களை இட்டவாரும் பந்தயச்சாலையை சுற்றி வந்தனர்.
இறுதியில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டுமென்று உறுதிமொழி எடுத்து வலியுறுத்தினர்.