March 8, 2019
தண்டோரா குழு
கோவையில் 100டிகிரியை தொடும் அளவிற்கு வெயில் அடிப்பதால் மக்களுக்கு அன்றாட செயல்களை செய்வதே கடினமாக உள்ளது.
கோவை மாவட்டத்திற்கு அதன் குளுமைக்காகவே பல ஊர்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து தங்குவது வழக்கம். ஆனால் தற்போது கோடை மாதம் துவங்குவதற்கு முன்பாகவே 100டிகிரியை தொட உள்ளது. கோவையில் தற்போது வெயில் அதிகமாகி கொண்டே உள்ளது மே மாதம் அடிக்கும் வெயில் மார்ச் மாதமே அடிக்கிறது. இதனால் அன்றாட செயல்களை செய்வதே கடினமாக உள்ளது.
காலை 11 மணி முதல் 4 மணி வரை வெளியே வரவே முடியவில்லை. அதிக அளவில் இளநீர் மற்றும் பழச்சாறு குடிக்கவேண்டி உள்ளது இதை பயன்படுத்தி வியாபாரிகளும் விலை அதிகமாக விற்பனை செய்வதாக கடிந்து கொண்டனர்.