• Download mobile app
01 May 2024, WednesdayEdition - 3003
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 10 மையங்களில் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 8,055 பேர் எழுதுகின்றனர்

December 7, 2021 தண்டோரா குழு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு தொடர்பாக ஆட்சியர் சமீரன் தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

இத்தேர்வு வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 மையங்களில் 8,055 பேர் தேர்வு எழுத உள்ளனர். காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்கு தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவில் புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தேர்வர்கள் கொரோனா தொற்று தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க