• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் SAM பிராஞ்ச் சார்பாக இரத்த தான முகாம்

January 22, 2021 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் SAM பிராஞ்ச் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று போன்ற காரணங்களால், ரத்த தானம் செய்கிற சமூக ஆர்வலர்கள் வெளியில் வர இயலாத நிலையில் இரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது போன்ற அவசர நிலை கருதி நாடு முழுவதும் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை லட்சுமி மில் பகுதியில் உள்ள (SAM) சாம் பிராஞ்ச் சார்பாக இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் இணைந்து இரத்ததான முகாம் நடைபெற்றது. துணை பொது மேலாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இதில் வங்கியின் உயர் அதிகாரிகள் துவங்கி அனைத்து ஊழியர்களும் இரத்த தானம் செய்தனர்.

இது குறித்து கிளையின் துணை பொது மேலாளர் பாஸ்கரன் கூறுகையில்,

தற்போது கொரோனா தொற்று போன்ற காரணங்களால் இரத்ததானம் செய்பவர்கள் குறைந்துள்ளதால், ரத்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சமூக பொறுப்பை உணர்ந்து எங்களது வங்கி இந்த இரத்ததான முகாமை நடத்துவதாகவும்,வரும் காலங்களில் இந்த சமூக பணியை தொடர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க