• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்

January 26, 2021 தண்டோரா குழு

கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் டிரேக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர். தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். அப்போது வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து டாடாபாத் பகுதி வரை தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர்.

200 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தேசியக்கொடிகளுடன் பேரணி நடத்தினர்.

மேலும் படிக்க