• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம்

January 26, 2021 தண்டோரா குழு

கோவையில் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தை முன்னிட்டு விவசாயிகள் டிரேக்டர் பேரணி நடத்தினர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விவசாயிகள் சங்க கூட்டியக்கத்தினர் போராட்டம் நடத்தினர். தேசியக்கொடி மற்றும் விவசாய கருவிகளுடன் ஊர்வலமாக வந்து போராட்டம் நடத்தினர். அப்போது வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து டாடாபாத் பகுதி வரை தொழிற்சங்க கூட்டுக்குழுவினர் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினர்.

200 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தேசியக்கொடிகளுடன் பேரணி நடத்தினர்.

மேலும் படிக்க