• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கர் கைது

August 2, 2018 தண்டோரா குழு

வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் என விளம்பரம் செய்த ஹீலர் பாஸ்கரை குனியமுத்தூர் போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் திருப்பூரில் கார்த்திக் – கிருத்திகா தம்பதியினர், கார்த்திக்கின் நண்பர் பிரவீன் மூலம் கருவுற்றிருந்த கிருத்திகாவிற்கு சமூக வலைத்தளங்களில் கூறப்பட்ட மரூட்டி என்கிற முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர். இதில்,அதிக இரத்தப்போக்கால் தாய் கிருத்திகாவின் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

இதற்கடையில், மரூட்டி முறையில் வீட்டில் இருந்தபடியே மருந்து மாத்திரை, தடுப்பூசி எதுவும் இன்றி சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் வருகிற 26ஆம் தேதி நடைபெறும் என கோவைபுதூரில் செயல்பட்டு வரும் நிஷ்டை சர்வதேச வாழ்வியல் பயிற்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக சமூக வலைத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் குறித்து, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விளம்பரத்தை வெளியிட்டது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் அந்நிறுவனத்திடம் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, நிஷ்டை மையத்தின் உரிமையாளர் ஹீலர் பாஸ்கரிடம் மாநகர சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் விசாரணைக்கு ஹீலர் பாஸ்கர் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இதனால் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஹீலர் பாஸ்கர் மற்றும் நிஷ்டை அமைப்பின் மேலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே ஹீலர் பாஸ்கரை, குனியமுத்தூர் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சி என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க