• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல மூதாட்டி அடித்து கொலை

March 19, 2019 தண்டோரா குழு

கோவையில் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து, மர்ம நபர்கள் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

கோவையை அடுத்த செளரிபாளையம் பகுதியை அடுத்த அன்னை வேளாங்கண்ணி நகரில் ஓய்வுபெற்ற செவிலியரான மேரி ஏஞ்சலின் என்பவர் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு ஒரு ஆண் , மற்றும் ஒரு பெண் என இருவர் அவரது வீட்டிற்கு வந்து வீடு வாடகைக்கு உள்ளதா என்பதை கேட்டு உள்ளனர். பிறகு திடீரென அவரை தாக்கி அவர் அணிந்து இருந்த ஐந்தரை பவுன் நகையை கொள்ளையடித்து உள்ளனர். பிறகு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து உள்ளனர். உடனடியாக இருவரும் அங்கிருந்து தப்பி சென்றனர். அருகில் இருந்தவர்கள் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மேரி ஏஞ்சலின் கிடந்து உள்ளார். உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க