• Download mobile app
05 Jun 2025, ThursdayEdition - 3403
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் வாரச்சந்தைகள் இயக்குவதற்கு தடை ..!

June 10, 2020 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகளில்
பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசல்கள்
மிகுந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வரப்பெற்று வருகிறது. இதனடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்
ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., உத்தரவின்படி,மாநகராட்சிப்பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாத காரணத்தினாலும், கொரானா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.

மேலும் படிக்க