• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்

February 5, 2019 தண்டோரா குழு

காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் காவலரால் ஏற்பட்ட அவமானத்தால் மனமுடைந்ததாக கூறி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக்கொண்ட ராஜேஷ் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும், ஓட்டுனர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் வாடகை வாகனங்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து இந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நலச்சங்கம், கால் டேக்சி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 5 ஆயிரம் வாகனங்கள் இயங்கி வரும் நிலையில், 2000 வாகனங்கள் இன்றைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

மேலும், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே வாடகை கார் ஓட்டுனர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த ஓட்டுனர் ராஜேஷ் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உயிரிழப்புக்கு காரணமான காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்தாண்டு மட்டும் ராஜேஷ் தவிர முத்து, மணிகண்டன், என இரு வாடகை கார் ஓட்டுனர்கள் காவல்துறையினரின் தவறான நடவடிக்கையின் காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க